×

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் சில பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுரிகளுக்கு கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி. நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Mikjam ,Tamil ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...